Last Updated : 12 Dec, 2015 04:52 PM

 

Published : 12 Dec 2015 04:52 PM
Last Updated : 12 Dec 2015 04:52 PM

பல்லாவரம் பகுதி மக்களுக்கு சமந்தா ரூ.30 லட்சத்தில் நிவாரண உதவிகள்

தான் பிறந்து வளர்ந்த பல்லாவரம் பகுதி மக்களுக்கு நடிகை சமந்தா ரூ.30 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் அளிக்கிறார்.

சென்னையில் கனமழை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் சென்னையின் வெள்ள நிவாரணத்துக்கு நிதியாகவும், பொருட்களாகவும் அளித்து வந்தனர்.

இந்நிலையில், தான் பிறந்து வளர்ந்த பல்லாவரம் பகுதி மக்களின் நிவாரணத்துக்காக நடிகை சமந்தா 30 லட்சம் ஒதுக்கி இருக்கிறார்.

அப்பகுதியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்காக பொருட்களாக வாங்கி அளிக்க திட்டமிட்டு இருக்கிறார் சமந்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x