Last Updated : 22 Nov, 2015 05:13 PM

 

Published : 22 Nov 2015 05:13 PM
Last Updated : 22 Nov 2015 05:13 PM

மலேசியாவில் தமிழ் பட நாயகன் கேசவன் பலி

மலேசியாவில் 'க க க போ' படத்தின் நாயகன் கேசவன் நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.

அறிமுக இயக்குநர் விஜய் இயக்கத்தில் புதுமுக நடிகர் கேசவன் நடிப்பில் தயாராகி வந்த படம் 'க க க போ'. சாக்‌ஷி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மதன்பாப், சிங்கம் புலி, கருணாஸ், உள்ளிட்ட 32 கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து சமீபத்தில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியை தன் குடும்பத்தோடு காண மலேசியா சென்றிருக்கிறார்.

இந்நிலையில், மலேசியாவில் உள்ள IPOH, B DOOR என்னும் இடத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் குளித்த போது, பெற்றோரின் கண்முன்னே தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை தேடி வந்த மலேசிய காவல்துறையினர் இறந்த நிலையில் கண்டு எடுத்தனர்.

நாயகன் கேசவன் மறைவைக் கேட்டு 'க க க போ' படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டு இருந்தது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x