Last Updated : 23 Nov, 2015 01:14 PM

 

Published : 23 Nov 2015 01:14 PM
Last Updated : 23 Nov 2015 01:14 PM

174 மூலம் மீண்டும் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா

புதுமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் '174' படத்தில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா

'இசை' படத்தை இயக்கி, நடித்ததைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இறைவி' படத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மேலும், விஜய்யை வைத்து படம் இயக்க கதை ஒன்றையும் தயார் செய்திருந்தார்.

விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயரும் இடம்பெற்றது. தற்போது, அப்படத்தை பரதன் இயக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது மீண்டும் நாயகனாக நடித்து, படத்தைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. செல்வராகவனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மணிகண்டன் இயக்கவிருக்கும் '174' படத்தில் நடித்து, தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒரு மரணம் நிகழ்ந்தவுடன் போலீஸார் இது கொலை என்று சந்தேகிக்கும் போது, '174' சட்டத்தை பயன்படுத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வார்கள். இச்சட்டத்தைக் பின்புலமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் மணிகண்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x