Published : 27 Jan 2021 09:50 PM
Last Updated : 27 Jan 2021 09:50 PM
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு ப்ரியா பவானி சங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சூர்யாவுடனான படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமானார் ஹரி. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்களைவிட, இந்தப் படத்தின் பொருட்செலவு அதிகம் என்கிறது படக்குழு. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அருண் விஜய் - ப்ரியா பவானி சங்கர் கூட்டணி இந்தப் படத்துக்கு முன்னதாக 'மாஃபியா' படத்தில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டு, படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு.
The Most talented @priya_Bshankar on board for #AV33 & #Hari16 #DirectorHARI@DrumsticksProd @arunvijayno1 @0014arun @ertviji @johnsoncinepro @CtcMediaboy pic.twitter.com/nQ5IqJAZRz
— Drumsticks Productions (@DrumsticksProd) January 27, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT