Published : 23 Dec 2020 01:04 PM
Last Updated : 23 Dec 2020 01:04 PM
ஸாக் ஹாரிஸ் இயக்கவுள்ள புதிய படத்தில் கதிர் மற்றும் ஆனந்தி இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் கதிர் - ஆனந்தி இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
புதுமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்கவுள்ள இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி இருவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேனும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஏஏஏஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. த்ரில்லர் டிராமா பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.
கதிர், ஆனந்தி, நரேன் ஆகியோருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து முடிவானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் படத்தைத் தொடங்கி, கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறவுள்ளது.
With all ur love and wishes
— kathir (@am_kathir) December 23, 2020
Next with @AaarProductions
teaming up with @itsNarain sir & @anandhiactress directed by @ZacHarriss@DoneChannel1 #AaarProductionNo1 pic.twitter.com/dG1wNjSwHk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT