Last Updated : 13 Oct, 2015 05:25 PM

 

Published : 13 Oct 2015 05:25 PM
Last Updated : 13 Oct 2015 05:25 PM

குற்றம் கடிதல் படத்துக்கு புதுச்சேரி அரசு விருது

'குற்றம் கடிதல்' படத்தை இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது. இதற்கான ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை முதல்வர் ரங்கசாமி வரும் 16-ம் தேதி அளிக்கிறார்.

புதுச்சேரியில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக 'குற்றம் கடிதல்' படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களிடம் அன்போடு பழக வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு சங்கரதாஸ்சுவாமிகள் விருது மற்றும் ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையை வரும் 16-ம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் முதல்வர் ரங்கசாமி வழங்க உள்ளார்.

இவ்விருதினை படத்தின் இயக்குநர் பிரம்மா பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x