Published : 19 Dec 2020 06:44 PM
Last Updated : 19 Dec 2020 06:44 PM

'சாணிக் காயிதம்' இயக்குநரைப் பாராட்டிய செல்வராகவன்

சென்னை

'சாணிக் காயிதம்' படத்தின் இயக்குநரை வெகுவாகப் பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் வெளியாகாத இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கைப்பற்றியுள்ளது.

'ராக்கி' படத்துக்கான எதிர்பார்ப்பை வைத்து, அருண் மாதேஸ்வரனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவியது. நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

'சாணிக் காயிதம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'சாணிக் காயிதம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

தற்போது படக்குழுவினருடன் திரைக்கதையைப் படிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருண் மாதேஸ்வரனின் முழுத் திரைக்கதையையும் படித்துவிட்டு இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"அருண் மாதேஸ்வரனின் திரைக்கதையை இப்போதுதான் அவருடன் படித்து முடித்தேன். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அசாதாரணமாக இருக்கிறது".

இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

'சாணிக் காயிதம்' படத்தில் நடித்து முடித்துவிட்டு, தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் செல்வராகவன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x