Last Updated : 02 Nov, 2020 11:12 AM

 

Published : 02 Nov 2020 11:12 AM
Last Updated : 02 Nov 2020 11:12 AM

தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்தவர்கள் தைரியசாலிகள்: இயக்குநர் பிஜோய் நம்பியார்

தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்தவர்கள் தைரியசாலிகள் என்று இயக்குநர் பிஜோய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

‘டேவிட்’, ‘சோலோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிஜோய் நம்பியார். தற்போது இந்தியில் இவர் இயக்கிய ‘டைஷ்’ என்ற படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்களே வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட பரிசோதனைகளுக்காக ‘ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இருப்பதாக பிஜோய் நம்பியுள்ளார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''தென்னிந்தியாவைச் சேர்ந்த தயாரிப்பாளர்களே வித்தியாசமான கதைக்களங்களையும், கதை சொல்லல் முறையிலும் பரிசோதனை முயற்சிகளுக்காக ‘ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். நடிகராக இருந்தாலும் சரி, தொழில்நுட்பக் கலைஞர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் தொடர்ந்து ரிஸ்க் எடுத்து வருகின்றனர். ஆனால், இந்தித் திரையிலகில் முற்றிலும் வேறு மாதிரியான சூழல். நான் அனைவரையும் பொதுமைப்படுத்தவில்லை. தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்தவர்கள் தைரியசாலிகள் என்று சொல்வேன்''.

இவ்வாறு பிஜோய் நம்பியார் கூறியுள்ளார்.

தற்போது கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 8 இயக்குநர்களுடன் பிஜோய் நம்பியாரும் ‘நவரசா’ என்ற ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x