Published : 18 Oct 2015 07:23 AM
Last Updated : 18 Oct 2015 07:23 AM

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் இன்று நடிகர் சங்கத் தேர்தல்: இரவே முடிவுகள் வெளியாக வாய்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் இன்று நடக்கிறது. தேர்தல் நடைபெறும் செயின்ட் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



தென்னிந்திய நடிகர் சங்கத் துக்கு 2015-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற் கான தேர்தல் சென்னை மயிலாப் பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலை முன்னிட்டு இரு அணியினரும் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இத்தேர்தலில் மொத்தம் 3,139 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக உள்ளனர். இவர்களில் தபால் மூலமாக வாக்களிக்க 934 பேர் விண்ணப்பித்தனர். தபால் ஓட்டு மூலமாக வாக்குப்பதிவு செய்வது நேற்று மாலையுடன் முடிவடைந்தது. மொத்தம் 783 வாக்குகள் பதிவானது. இதில் 43 வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார்.

நடிகர் சங்கத் தேர்தலுக்காக மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் உள்ள வகுப்பறை வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது. தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த சென்னை மாநகர போலீஸார் விரிவான ஏற்பாடு களைச் செய்துள்ளனர். வாக்குப் பதிவின்போது 1 இணைக் கமிஷனர், 2 துணைக் கமிஷனர்கள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளனர். வாக்களிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை கண்காணிக்க பள்ளி வளாகத்தில் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நேற்று மாலை செயின்ட் எப்பாஸ் பள்ளியை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் அலுவலர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார். நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே வாக்குகள் எண்ணப்படும். இன்று இரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சங்க தேர்தலை ஒட்டிய வீடியோ பதிவுகளின் இணைப்புகள்

"அமெரிக்காவில் தமிழகத்தை இழிவுபடுத்தி பேசியவர் கமல்ஹாசன்": சரத்குமார் கோபம் - http://bit.ly/1Gb11O8

''நடிகர் சங்கத்துக்கு கிடைத்த அப்துல் கலாம் இந்த சரத்குமார்'' - ராதாரவி புகழாரம் - http://bit.ly/1Pofzwz

"பாயும் புலியில் 10 கோடி நஷ்டம், ஆம்பள 6 கோடி": விஷாலை வாரும் தாணு - http://bit.ly/1MvxGuz

"கார்த்தி நீ விஷால் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறாய்" - ராதிகா ஆவேசம் - http://bit.ly/1RgHPPn

"கார்த்தியும் விஷாலும் முதலில் நடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்" - சேரன் அறிவுரை - http://bit.ly/1Poh123

''நாங்க எங்கயுமே சமாதானத்துக்கு போகலை!'' - சரத்குமார் - http://bit.ly/1Ne8s6T

''எம்.ஜி.ஆர் ஆத்மா கார்த்தி-க்குள், சிவாஜி கணேசன் நாசருக்குள்" - எஸ்.எஸ்.ஆர் நினைவு விழாவில் விஷால் உருக்கம் - http://bit.ly/1XcaCs9

குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லப் போவதில்லை... வெற்றி உறுதி! - விஷால் நம்பிக்கை - http://bit.ly/1Lpu0Qn

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x