Published : 26 Oct 2020 02:59 PM
Last Updated : 26 Oct 2020 02:59 PM

மீண்டும் இயக்குநராகும் சி.வி.குமார்

முன்னணித் தயாரிப்பாளரான சி.வி.குமார் மீண்டும் படமொன்றை இயக்கவுள்ளார்.

'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி', 'அட்டகத்தி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட பல வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். மேலும், 'மாயவன்' மற்றும் 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

தற்போது '4ஜி', 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். இதனிடையே, அடுத்து இயக்கவுள்ள படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் சி.வி.குமார்.

இந்தப் படத்தில் ராஜேஷ் கனகசபை, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரகாஷ் ருத்ரா, எடிட்டராக அஸ்வின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x