Published : 25 Sep 2020 09:09 PM
Last Updated : 25 Sep 2020 09:09 PM

மறக்க முடியாது பாலு சார்; மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்

சென்னை

மறக்க முடியாது பாலு சார். மறக்கவே முடியாது என்று எஸ்பிபி மறைவு குறித்து சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"எஸ்பிபி சார், 40,000 பாடல்கள். உங்கள் குரலுக்கு வாயசைக்கும் பெரும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் குடும்பத்தினருக்கும், நான் உட்படக் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறக்க முடியாது பாலு சார். மறக்கவே முடியாது".

இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x