Published : 25 Sep 2020 08:42 PM
Last Updated : 25 Sep 2020 08:42 PM

இயற்கையைப் போல எங்கும் நிறைந்திருப்பார் எஸ்பிபி: கார்த்தி புகழாஞ்சலி

எஸ்பிபி இயற்கையைப் போல எங்கும் நிறைந்திருப்பார் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ்பிபி மறைவுக்கு கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இந்த அற்புத ஆன்மாவுக்கு விடைகொடுக்க வேண்டிய நாள் வரும் என்று நான் என்றும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. நமது வாழ்க்கையின் அத்தனை உணர்வுகளையும் முதல் முறையாக அவரது குரல் மூலமாக உணர்ந்திருக்கிறோம். அன்பு, இளம் காதல், வீரம், மகிழ்ச்சி, உற்சாகம், இரக்கம், சோகம் என அத்தனையும்.

எப்போதும் அடக்கமாக இருக்க, எல்லோரிடமும் ஒரே மாதிரி அன்பும் மரியாதையும் செலுத்த அவர் எனக்குக் கற்றுத் தந்தார். எஸ்பிபி இயற்கையைப் போல. எங்கும் நிறைந்திருப்பார். அவரது தெய்வீகக் குரலைக் கேட்டு வளர்ந்த நமது அனைவரின் ஒவ்வொரு அணுவிலும் இருப்பார். உங்களையும் உங்கள் அன்பையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன் சார்".

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x