Published : 24 Sep 2020 12:49 PM
Last Updated : 24 Sep 2020 12:49 PM
விஜயகாந்த் பூரணம் நலம்பெற இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி தென்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திரையுலகிலும் முக்கிய நபர் என்பதால், திரையுலகினர் பலரும் அவருக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. அவர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பப் பிரார்த்திப்போம்"
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
வணக்கம்
— Bharathiraja (@offBharathiraja) September 24, 2020
நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்குஅப்பாற்பட்டு,மிகச் சிறந்த மனிதர்.அவருக்கு coronaதொற்றுஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறசெய்தி
கவலையளிக்கிறது.
அவர்தொற்றில்இருந்துபூரண குணமடைந்து விரைவில்வீடு திரும்ப பிரார்த்திப்போம்.
அன்புடன்
பாரதிராஜா @iVijayakant pic.twitter.com/I16qh3O7Dh
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT