அப்பாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்; அனைத்தும் நல்ல அறிகுறிகளே: எஸ்பிபி சரண்

அப்பாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம்; அனைத்தும் நல்ல அறிகுறிகளே: எஸ்பிபி சரண்
Updated on
1 min read

அப்பாவின் நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாகவும், அனைத்தும் நல்ல அறிகுறிகள்தான் என்றும் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 28) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"அப்பா மெதுவாக நல் ஆரோக்கியத்தை நோக்கி மெதுவாக முன்னேறி வருகிறார். கடந்த இரண்டு நாட்களைவிட நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் உள்ளது. எனவே அனைத்தும் நல்ல அறிகுறிகளே.

மருத்துவர்களும் நம்பிக்கையாக இருக்கிறார்கள். மீண்டும் அப்பாவுக்காக உங்கள் பிரார்த்தனைகள், அக்கறை, அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறிய வேண்டுகோள், உங்கள் பிரார்த்தனைகளைத் தொடருங்கள். மீண்டும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி."

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in