Published : 27 Aug 2020 05:46 PM
Last Updated : 27 Aug 2020 05:46 PM

எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை; நலமாக இருக்கிறார்: சரண் தகவல்

சென்னை

அப்பா ஆரோக்கியமாக இருக்கிறார். குணமாகிக் கொண்டு வருகிறார் என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து எஸ்.பி.பி.யின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 27) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"வணக்கம். அப்பா தொடர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார். தேறி வருகிறார். இது ஒரு நல்ல அறிகுறியே. இன்று அப்பாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் செய்திருக்கிறார்கள். நான் இன்று அப்பாவைச் சென்று பார்க்கவில்லை.

மீண்டும் எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், அப்பாவுக்காக அன்பு, அக்கறை மற்றும் பிரார்த்தனை செய்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். விரைவில் பல நல்ல செய்திகள் வரும் என நம்புகிறேன்.

எந்தத் தகவலும் இல்லை என்றாலே நல்ல விஷயம்தான் என்றார்கள். எனவே அப்பா ஆரோக்கியத்துடன், குணமாகிக் கொண்டு வருகிறார். நன்றி."

இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

#SPB Health update 27/8/20

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x