Published : 19 Jul 2020 04:24 PM
Last Updated : 19 Jul 2020 04:24 PM

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - நலன் குமாரசாமி கூட்டணி

சென்னை

நலன் குமாரசாமி இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்காக அவரிடம் பேசியுள்ளார் விஜய் சேதுபதி

2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான படம் 'சூது கவ்வும்'. சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

'சூது கவ்வும்' படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - நலன் குமாரசாமி கூட்டணி 'காதலும் கடந்து போகும்' படத்தில் பணிபுரிந்தது. இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பிறகு நலன் குமாரசாமி இன்னும் படம் இயக்கவில்லை. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் மட்டும் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க விருப்பப்படுவதாக விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் "ஒரு மாதத்துக்கு முன்பு நலன் குமாரசாமியிடம் பேசினேன். 'சூது கவ்வும்' படம் பண்ணும் போது புரியவே இல்லை. அவரிடமே அந்தப் படம் புரியாமலேயே நடித்தேன் என்று சொன்னேன். கதை பிடித்திருந்தது, ஆனால் கேரக்டர் புரியவே இல்லை.

'காதலும் கடந்து போகும்' படத்தில் அவருடைய எழுத்து புரியும் போது, படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது தான் தலைவா உங்களுடைய எழுத்துகள் புரிகிறது. இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். சிறப்பா பண்ணலாம் தலைவா சொல்றேன் என்று சொல்லியிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார் விஜய் சேதுபதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x