Last Updated : 29 Jun, 2020 05:36 PM

 

Published : 29 Jun 2020 05:36 PM
Last Updated : 29 Jun 2020 05:36 PM

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி விபத்தில் காயம்

சிவகங்கை

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி விபத்தில் காயமடைந்தார்.

சிவகங்கை அருகே சில தினங்களுக்கு முன் இந்த விபத்து நடந்தது. கரோனா களேபரங்களால் அவரது விபத்து செய்தி வெளியில் பரவாமல் போனது.

ஆண்பாவம் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்கள் நடித்திருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி.

சிவகங்கை அருகே கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புற பாடகியான இவர், ஆண் பாவம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து தமிழக அரசு கவுரவித்தது. இந்திலையில் சில தினங்களுக்கு முன்பு இரவில் உணவு வாங்குவதற்காக சிவகங்கை சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் கொல்லங்குடி கருப்பாயிக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x