Last Updated : 15 Jun, 2020 10:01 AM

 

Published : 15 Jun 2020 10:01 AM
Last Updated : 15 Jun 2020 10:01 AM

தற்கொலை செய்துகொண்ட சுஷாந்துக்கு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததா?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று (14.06.20) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'சுதேசி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் சுஷாந்துக்கு திருமணம் நடக்கவிருந்ததாக அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரபல தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதை உறுதி செய்துள்ளார். சுஷாந்தின் குடும்பத்தினர் வரும் நவம்பர் மாதம் அவருக்கும் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தாகவும், அதில் மிக நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும் மட்டுமே அழைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண் யார் என்று அவர் குறிப்பிடவில்லை.

தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங்கும், நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x