Published : 19 May 2020 08:35 AM
Last Updated : 19 May 2020 08:35 AM

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலியின் பராமரிப்பு செலவை ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்

வெள்ளைப் புலி அனு

சென்னை

வண்டலூர் உயிரியல் பூங்காவில்பராமரிக்கப்படும் வெள்ளைப்புலியின் 4 மாத பராமரிப்புசெலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வண்டலூர் பூங்காவில் சுமார் 2,700 விலங்குகள் உள்ளன. இப்பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக ‘விலங்குதத்தெடுப்பு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ‘அனு’ என்னும் வெள்ளைப் புலியை மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்து எடுத்துள்ளார். 2018-ம் ஆண்டுமுதல் இப்புலியை தொடர்ந்து தத்தெடுத்து வருகிறார். இப் பூங்காவில் ‘அனு’ புலியுடன் சேர்த்து மொத்தம் 14 வெள்ளைப்புலிகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x