Published : 16 May 2020 10:07 PM
Last Updated : 16 May 2020 10:07 PM

இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டும் 'பிஸ்கோத்' 

'பிஸ்கோத்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கண்ணன் இயக்கத்தில் 'ஜெயம் கொண்டான்' மற்றும் 'கண்டேன் காதலை' உள்ளிட்ட படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து கண்ணன் இயக்கியுள்ள முதல் படம் 'பிஸ்கோத்'.

தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிவசங்கர், ‘லொள்ளு சபா’ மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'சௌகார்' ஜானகி சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளார். இது அவருக்கு 400-வது படம்.

ஒரே கட்டமாக இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு. கரோனா ஊரடங்கினால் இதன் இறுதிக்கட்டப் பணிகள் பாதித்தது. தற்போது தமிழக அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தின் பணிகள் தொடர்பாக இயக்குநர் கண்ணன் "படத்தின் இறுதிக்கட்டக் காட்சிகள் குறைப்பு நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் முதல் பிரதி தயாராகிவிடும்" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாகப் பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்குச் செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த ரதன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x