விரைவில் 'சூது கவ்வும் 2': திரைக்கதை உருவாக்கம் மும்முரம்

விரைவில் 'சூது கவ்வும் 2': திரைக்கதை உருவாக்கம் மும்முரம்
Updated on
1 min read

விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பு பெற்ற படம் 'சூது கவ்வும்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை உருவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், அசோக் செல்வன், கருணாகரண், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூது கவ்வும் 2'. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு 'சூது கவ்வும் 2' எப்போது என்ற கேள்வி, விஜய் சேதுபதி, இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் சி.வி.குமார் ஆகியோரைத் துரத்திக் கொண்டே இருந்தது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போதைக்கு படத்தின் கதையை இறுதி செய்து, அதற்கு திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சி.வி.குமாரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

மேலும், கரோனா ஊரடங்கு முடிவடைந்து அனைத்தும் சரியானவுடன் தனது தயாரிப்பில் உருவாகியுள்ள 'டைட்டானிக்' படத்தையும் வெளியிட சி.வி.குமார் முடிவு செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in