Published : 13 Apr 2020 09:53 PM
Last Updated : 13 Apr 2020 09:53 PM

'சக்ரா' படத்தின் கதைக்களம்

விஷால் நடித்து வரும் ’சக்ரா’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார் விஷால். இந்தப் படத்துக்கு முதலில் 'இரும்புத்திரை 2' என தலைப்பிடத் திட்டமிட்டனர். ஆனால், 'சக்ரா' எனத் தலைப்பிட்டுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு.

விஷால் தயாரித்து, நாயகனாக நடித்துள்ல இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'சக்ரா' தலைப்பு ஏன் என்று விசாரித்த போது, இந்தப் படம் அசோக சக்ராவைப் பற்றிய படமாம். படத்தின் நாயகன் தனது அப்பாவின் அசோக சக்ரா மெடலைத் தேடி பயணிப்பதே கதை. மேலும், இந்தப் படத்தின் களமாக தொலைபேசியை ஹேக் செய்வது பற்றியும் இருக்கிறது.

இதனாலே முதலில் 'இரும்புத்திரை 2' தலைப்பு குறித்து பேச்சுவார்த்தை போயிருக்கிறது. ஆனால், 'சக்ரா' தலைப்பே பொருத்தமாக இருக்கும் என்பதால் அதையே வைத்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x