Published : 07 Apr 2020 12:56 PM
Last Updated : 07 Apr 2020 12:56 PM

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: திருமண மண்டபத்தை ஒப்படைக்கும் வைரமுத்து

கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காகத் தனது திருமண மண்டபத்தை ஒப்படைப்பதாக வைரமுத்து தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் கரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளைத் தாண்டி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய திருமண மண்டபங்கள், கல்லூரி வளாகங்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

தற்போது, தனது திருமண மண்டபத்தை கரோனா சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று கவிப்பேரரசு வைரமுத்து, முதல்வர் பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக எங்கள் திருமண மண்டபத்தை (பொன்மணி மாளிகை) அரசுக்கு ஒப்படைக்கிறேன் என்று முதலமைச்சருக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டின் நலமே நமது நலம்".

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

— வைரமுத்து (@vairamuthu) April 7, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x