Published : 05 Apr 2020 04:20 PM
Last Updated : 05 Apr 2020 04:20 PM

'இறவாக்காலம்' எப்போது வெளியாகும்? - இயக்குநர் அஸ்வின் சரவணன் பதில்

'இறவாக்காலம்' எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் பதிலளித்துள்ளார்.

'மாயா' படத்துக்குப் பிறகு அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'இறவாக்காலம்'. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யோஹன் இசையமைத்திருந்தார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

'மெர்சல்' படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்தை தயாரித்து முடித்துவிட்டது தேனாண்டாள் நிறுவனம். ஆனால், 'மெர்சல்' படத்துக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்தப் படம் இப்போது வரை வெளியாகவே இல்லை.

இந்தப் படத்துக்குப் பிறகு அஸ்வின் சரவணன் இயக்கிய 'கேம் ஓவர்' படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை பலரும் அஸ்வின் சரவணனிடம் எப்போது 'இறவாக்காலம்' வெளியாகும் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

அவ்வாறு ட்விட்டர் தளத்தில் அஸ்வின் சரவணனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு "எப்போது 'இறவாக்காலம்' படத்தைப் பெரிய திரையில் காண முடியும்" என்று கேள்வி எழுப்பினார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக அஸ்வின் சரவணன், "ஒரு நாள் கூட என்னிடம் யாரும் அப்டேட் கேட்காமல் இருப்பதில்லை.

ஒரு குழுவாக, படத்தைத் திரையில் காண உணர்ச்சிப்பூர்வமாகப் பலரும் முதலீடு செய்திருப்பதைக் காண நெகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்குச் சொல்ல என்னிடம் பதிலிருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நம்பிக்கையைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்து, நல்லவை நடக்கப் பிரார்த்திப்போம்" என்று பதிலளித்துள்ளார் அஸ்வின் சரவணன்.

தற்போது தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வருகிறார் அஸ்வின் சரவணன். இதில் பிரசன்னா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

— Ashwin Saravanan (@Ashwin_saravana) April 3, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x