Published : 03 Apr 2020 07:23 AM
Last Updated : 03 Apr 2020 07:23 AM

அணிவகுக்கும் மறு ஒளிபரப்பு!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களின் படப்பிடிப்பு களும் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், படப்பிடிப்பு நடத்தப்பட்ட வரை அனைத்து சேனல்களும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன. இந்த நிலையில், ‘கையிருப்பு’ தீர்ந்துவிட்டதால், ஏற்கெனவே ஒளிபரப்பான தொடர்களை மறு ஒளிபரப்பு செய்யத் தொடங்கியுள்ளன சேனல்கள். அவற்றுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு கூடியிருக்கிறது.

தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் ராமானந்த சாகரின் ‘ராமாயணம்’, ‘சக்திமான்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. சன் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘மெட்டி ஒலி’, ‘தங்கம்’ தொடர்கள் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளன. அதேபோல விஜய் தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி’ தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் வரை அதை மறு ஒளிபரப்பு செய்ய விஜய் டிவி நிர்வாகம் முடிவெடுத்து கடந்த சில நாட்களாக ஒளிபரப்பி வருகிறது. ‘மகாபாரதம்’, ‘பிக்பாஸ் சீசன்-3’ ஆகியவையும் மீண்டும் வலம் வருகின்றன.

‘‘பால்ய கால நண்பர்களை பார்ப்பதுபோல, பார்வையாளர்கள் மீண்டும் பழைய தொடர்களை குதூகலமாக கொண்டாடத் தொடங்கியுள்ளனர். கரோனா பிரச்சினை சரியாகி இயல்பு நிலை திரும்பினாலும், இனி வரும் காலகட்டத்தில் இதுபோல மறு ஒளிபரப்புகள் தொடரவும் வாய்ப்பு உண்டு’’ என்கின்றனர் தொலைக்காட்சி தரப்பினர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x