Published : 28 Mar 2020 09:40 PM
Last Updated : 28 Mar 2020 09:40 PM

என் ஒரே தலைவன் விஜய்: 'கோப்ரா' இயக்குநர்

என் ஒரே தலைவன் விஜய் என்று 'கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சம் நீங்கியவுடன் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அதுவும் 'துப்பாக்கி' படத்தில் பணிபுரிந்திருப்பதால், விஜய்யை இயக்குவது தன் கனவு என்று சில பேட்டிகள் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் அஜய் ஞானமுத்து. அப்போது 'விஜய் குறித்து சில வார்த்தைகள். நீங்கள் 'துப்பாக்கி' படத்தின் உதவி இயக்குநர் என்பது தெரியும்' என்று கேட்டுள்ளார். அதற்கு "என் ஒரே தலைவன். சில நபர்களை உங்களால் வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது" என்று பதிலளித்துள்ளார் அஜய் ஞானமுத்து

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x