Published : 20 Mar 2020 09:43 PM
Last Updated : 20 Mar 2020 09:43 PM

பிரதமர் மோடியின் பேச்சைச் சாடிய 'தமிழ்ப் படம்' இயக்குநர்

கரோனா வைரஸ் தொடர்பான மோடியின் பேச்சை, 'தமிழ்ப் படம்' இயக்குநர் தனது ட்விட்டர் பதிவில் சாடியுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளன. கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பாகப் பிரதமர் மோடி நேற்றிரவு (மார்ச் 19) பொதுமக்களிடம் உரையாற்றினார். பலரும் என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.

தனது உரையில் கரோனா வைரஸ் குறித்த அச்சம் தொடர்பாகவும், அது பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மார்ச் 22 ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். இந்த மக்கள் ஊரடங்கிற்கு பாலிவுட் திரையுலகம் தொடங்கி பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பிரதமர் மோடியின் உரையை 'தமிழ்ப் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் சாடியுள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

”நாட்டின் பிரதமரிடம் இருந்து நமக்கு விழிப்புணர்வு வீடியோ தேவையில்லை. அவர் சொல்ல வேண்டியது இதுதான் என்றால் இதை அவர் முன்னரே சொல்லியிருக்க வேண்டும். பரிசோதனைகள், வீட்டுக்குள் இருப்பது, வரியைத் திருப்பி கொடுப்பது, நிவாரணம் போன்ற நடவடிக்கைகள் குறித்து அவர் பேசியிருக்க வேண்டும். வழக்கமான மக்கள் தொடர்பு”

இவ்வாறு சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x