Published : 20 Mar 2020 10:12 AM
Last Updated : 20 Mar 2020 10:12 AM

அதர்வாவுக்கு வில்லனாக நந்தா ஒப்பந்தம்

காவல்துறை அதிகாரியாக அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தின் வில்லனாக நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'100' படத்துக்குப் பிறகு தமிழில் 'குருதி ஆட்டம்', 'தள்ளிப் போகாதே', 'ஒத்தைக்கு ஒத்த' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ரவீந்திர மாதவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அதர்வாவுக்கு வில்லனாக நடிக்க நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் ரவீந்திர மாதவ் கூறியிருப்பதாவது:

“வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒருவரைத் தேடுவதென்பது நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்தப் பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரம் என்பது உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாகச் செயல்படுபவர். இரண்டிலுமே நந்தா தன்னை நிரூபித்தவர். கரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது”

இவ்வாறு ரவீந்திர மாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்தி சரவணன், எடிட்டராக கலை, சண்டை இயக்குநராக சரவணன், கலை இயக்குநராக ஐயப்பன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x