Published : 05 Mar 2020 04:58 PM
Last Updated : 05 Mar 2020 04:58 PM

'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு தொடக்கம்

அக்‌ஷய் குமார், தனுஷ் நடிப்பில் உருவாகும் 'அத்ரங்கி ரே' படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் 'ராஞ்சனா'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் மூலமே, இந்தித் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். அதனைத் தொடர்ந்தே அமிதாப் பச்சனுடன் இணைந்து 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்குப் பிறகு இந்தியில் கதைகள் மட்டுமே கேட்டு வந்தார். எந்தப் படத்தையும் தனுஷ் இறுதி செய்யவில்லை.

தற்போது, மீண்டும் தனது முதல் படமான ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், ஷாரா அலிகான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் தனுஷ் காட்சிகளையும், அக்‌ஷய் குமார் காட்சிகளை பிஹாரிலும் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார் ஆனந்த் எல்.ராய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 5) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பில் தனுஷ் காட்சிகள் மட்டும் படமாக்கப்படுகின்றன.

'கர்ணன்' படத்தின் 90% படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தப் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். 'அத்ரங்கி ரே' முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் 'கர்ணன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ்.

'அத்ரங்கி ரே' படத்தை டி-சீரியஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x