Published : 19 Feb 2020 12:08 PM
Last Updated : 19 Feb 2020 12:08 PM
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் பொருட்செலவு அதிகமாக உள்ளதால் படம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'சக்ரா' மற்றும் 'துப்பறிவாளன் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதில் 'சக்ரா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும், 'துப்பறிவாளன் 2' படத்தின் இந்தியக் காட்சிகளின் படப்பிடிப்பும் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த இரண்டு படங்களையுமே விஷால் தயாரித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, ஆனந்த் ஷங்கர் கூறிய கதையில் நடிக்கத் திட்டமிட்டு வந்தார் விஷால். முதலில் இந்தப் படத்தை விஷால் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு படங்களைத் தயாரித்து வருவதால் வேறொரு தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விஷால், ஆர்யா, ரீத்து வர்மா, தமன் இசை, முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு எனப் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டைக் கணக்கிட்டபோது, அதிகப்படியாக இருந்தது. இதனால் படத்தின் பொருட்செலவைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால், கதையின் களம் பெரியது என்பதால் என்ன செய்யவுள்ளனர் என்பது விரைவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT