Published : 24 Jan 2020 04:02 PM
Last Updated : 24 Jan 2020 04:02 PM

பெண் குழந்தைக்குத் தாயானார் சினேகா

பிரசன்னா - சினேகா தம்பதியினருக்கு இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது சினேகா - பிரசன்னா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு விஹான் என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 2-வது முறையாக கர்ப்பமானார் சினேகா. கர்ப்பத்துடனேயே 'பட்டாஸ்' படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார்.

தற்போது, தங்களுக்கு மகள் பிறந்திருப்பதாக பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்துள்ளார். 'தையில் மகள் பிறந்தாள்' என்று குறிப்பிட்டுள்ளார். பிரசன்னா - சினேகா தம்பதியினருக்குத் தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x