Published : 23 Jan 2020 08:25 PM
Last Updated : 23 Jan 2020 08:25 PM

பவன் கல்யாணை இயக்கும் க்ரிஷ்

'பிங்க்' ரீமேக்கிற்கு இடையே பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தை க்ரிஷ் இயக்கவுள்ளார்

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இந்தப் படத்தை, குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கினார் போனி கபூர்.

'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது. தற்போது பவன் கல்யாண் நாயகனாக நடிக்கத் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. வேணு ஸ்ரீராம் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பவன் கல்யாண் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை க்ரிஷ் இயக்கவுள்ளார். 'பிங்க்' ரீமேக்கிற்கு முன்னதாகவே இந்தக் கூட்டணி முடிவாகிவிட்டாலும், வரலாற்றுப் பின்னணி கொண்ட படம் என்பதால் நீண்ட நாட்களாகவே முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் பூஜையைப் பிரம்மாண்டமாக நடத்தி அறிவிக்கவுள்ளார்கள். மேலும், இந்தப் படத்தில் பல்வேறு பாலிவுட் பிரபலங்களையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்குச் சம்பளமாக அல்லாமல், படத்தின் லாப விகதத்தில் பங்குத் தொகையாக வாங்க பவன் கல்யாண் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x