Published : 23 Jan 2020 02:15 PM
Last Updated : 23 Jan 2020 02:15 PM

புகைப்படங்கள் லீக் எதிரொலி: பவன் கல்யாண் அதிரடி உத்தரவு

'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படம் முதல் நாளே லீக்கானதால், பவன் கல்யாண் படக்குழுவினருக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இந்தப் படத்தை, குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கினார் போனி கபூர்.

'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் தமிழில் ரீமேக்கானது. தற்போது பவன் கல்யாண் நாயகனாக நடிக்கத் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. வேணு ஸ்ரீராம் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்கள் வெளியாகிவிட்டன. முதல் நாளே வெளியான புகைப்படத்தால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு பவன் கல்யாண் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் படக்குழுவினர் யாருமே படப்பிடிப்புத் தளத்துக்குள் மொபைல் போன் எடுத்துவர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஏனென்றால், இதற்கு மேல் தான் நீதிமன்றத்துக்குள் நடக்கும் காட்சிகளை எடுக்கவுள்ளோம். அதனை யாரும் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துவிடக் கூடாது என்பதுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x