Published : 20 Jan 2020 08:45 PM
Last Updated : 20 Jan 2020 08:45 PM

பூரி ஜெகந்நாத்  - விஜய் தேவரகொண்டா கூட்டணியின் படப்பிடிப்பு தொடக்கம்

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'டியர் காம்ரேட்' படத்தைத் தொடர்ந்து 'வேர்ல்ட் பேமஸ் லவ்வர்' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் தேவரகொண்டா. தற்போது அந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டதால், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கரண் ஜோஹர், பூரி ஜெகந்நாத், சார்மி இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்காகத் தற்காப்புக் கலைகள் கற்றுக் கொண்டுள்ளார் விஜய் தேவரகொண்டா. முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடிப்பவர்கள் பட்டியல் எதையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. விரைவில் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'இஸ்மார்ட் ஷங்கர்' வெற்றிக்குப் பிறகு பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள படம் என்பதால், இந்தப் படத்தைப் பலரும் எதிர்நோக்கியுள்ளனர். இதில் நாயகியாக அனன்யா பாண்டே நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்கு 'ஃபைடர்' என தலைப்பிடப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x