Published : 31 Dec 2019 08:17 PM
Last Updated : 31 Dec 2019 08:17 PM
'எம்ஜிஆர் மகன்' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.
'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் உருவாகவிருந்த கதையில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். ஆனால், படத்தின் பொருட்செலவுக்குச் சரியான தயாரிப்பாளர் அமையாத காரணத்தால் அந்தக் கதையை ஒதுக்கி வைத்தார் பொன்ராம்.
அதற்குப் பிறகு உருவாக்கிய 'எம்ஜி.ஆர் மகன்' கதையில்தான் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை ஜனவரியில் வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.
'எம்ஜி.ஆர் மகன்' பணிகளை முடித்துவிட்டு, மீண்டும் விஜய் சேதுபதி படத்தைக் கையில் எடுத்துள்ளார் பொன்ராம். இம்முறை இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கிவிடும். ஏனென்றால், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதற்கான பொருட்செலவு, நடிகர்கள் யார் உள்ளிட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT