Published : 28 Dec 2019 06:31 PM
Last Updated : 28 Dec 2019 06:31 PM

‘தர்பார்’ சென்சார் எப்போது?

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் சென்சார் எப்போது எனத் தகவல் கிடைத்துள்ளது.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி இதன் ட்ரெய்லர் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியாகிறது. அதற்கு முன்னதாக, ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்படுகிறது.

எனவே, பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் அனிருத். இன்று அல்லது நாளை அந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும், இந்த வருட இறுதிக்குள்ளேயே சென்சாருக்கும் விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

காரணம், ஜனவரி 8-ம் தேதி ப்ரீமியர் ஷோ என்பதால், அதற்கு முன்னதாகவே வெளிநாடுகளுக்கு படத்தின் பிரதிகளை அனுப்பிவைக்க வேண்டும். அதனால், இந்த வருட இறுதிக்குள் விண்ணப்பித்தால்தான் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x