Published : 12 Dec 2019 08:33 PM
Last Updated : 12 Dec 2019 08:33 PM

'எஃப்.ஐ.ஆர்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கெளரவ்

விஷ்ணு விஷால் நடித்து வரும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கெளரவ் நடிக்கவுள்ளார்.

கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் வரும் படம் 'எஃப்.ஐ.ஆர்'. விஷ்ணு விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாகத் தயாரித்து, நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் தலைப்புக்கு 'ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்' என்று அர்த்தம் எனப் படக்குழு குறிப்பிட்டது.

இதன் படப்பிடிப்பு நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு 'எஃப்.ஐ.ஆர்' வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் கெளரவ்.

'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு', 'இப்படை வெல்லும்' ஆகிய படங்களை இயக்கியது மட்டுமன்றி, சில படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள கௌரவ், 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என்பதால், கண்டிப்பாகப் பேசப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். கருணாகரன், 'யூடியூப்' பிரசாந்த் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்த் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x