Published : 09 Dec 2019 08:29 PM
Last Updated : 09 Dec 2019 08:29 PM

கோல்டன் குளோப் விருது: பரிசீலனையில் 'ஒத்த செருப்பு' தேர்வு

கோல்டன் குளோப் விருதுகள் போட்டிக்குத் தமிழில் 'ஒத்த செருப்பு' மற்றும் 'டூலெட்' ஆகிய இரு படங்கள் தேர்வாகியுள்ளன.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

இந்தப் படத்தை இந்தியாவிலிருந்து ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பினார் பார்த்திபன். ஆனால், இந்திப் படமான 'கல்லி பாய்' ஆஸ்கர் பரிந்துரைக்குத் தேர்வானது. 'ஒத்த செருப்பு' தேர்வு செய்யப்படாதது குறித்துப் பல திரையுலகப் பிரபலங்கள் தங்களது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஆனால், இந்தியாவிலிருந்து அல்லாமல் நேரடியாக ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பும் முயற்சியில் கையிலெடுத்து பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இதனிடையே, இந்த ஆண்டு 63 நாடுகளைச் சேர்ந்த 92 வெளிநாட்டு மொழித் திரைப்படங்கள், கோல்டன் குளோப் விருதுப் போட்டிக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 'ஒத்த செருப்பு' படமும் ஒன்று.

அதில் இந்தியாவிலிருந்து 'ஒத்த செருப்பு சைஸ் 7', 'டூலெட்' ஆகிய தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 'கல்லி பாய்', 'போட்டோகிராஃப்' மற்றும் 'பாபா' ஆகிய இதர மொழிப் படங்களும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் க்ளோப் விருதுகள் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள படங்களைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x