Published : 07 Dec 2019 04:09 PM
Last Updated : 07 Dec 2019 04:09 PM

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா ஒப்பந்தம்

விஜய் சேதுபதி நடித்து வரும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கனிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கனிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை எனக் கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில், சர்வதேச அளவிலான ஒரு பிரச்சினையைப் பேசியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x