Published : 02 Dec 2019 05:48 PM
Last Updated : 02 Dec 2019 05:48 PM
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'டாக்டர்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், யோகி பாபு, இளவரசு, 'கோலமாவு கோகிலா' டோனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
டிசம்பர் 6-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். 'டாக்டர்' படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Our next project, in association with @SKProdOffl is going to see @Siva_Kartikeyan in an all new avatar!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT