Published : 29 Nov 2019 01:01 PM
Last Updated : 29 Nov 2019 01:01 PM

தமிழ்த் திரையுலகில் பணத்தையும், உறவுகளையும் இழந்துள்ளோம்: வருண் மணியன் வேதனை

தமிழ்த் திரையுலில் பணத்தை மட்டும் இழக்கவில்லை, நேரத்தை, உறவுகளையும் இழந்துள்ளோம் என்று வருண் மணியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. ஒன்றாக எண்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை முதலில் தயாரித்தது. ஆனால், பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது.

இறுதியாக, வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வெளியீட்டு உதவியுள்ளார். இதற்காக அவரது வேல்ஸ் நிறுவனத்துக்கு 3 படங்கள் இயக்கவுள்ளார் கெளதம் மேனன். கடும் போராட்டத்துக்குப் பிறகு 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியாகியுள்ளதால், படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகில் தயாரிப்பாளராக நுழைந்திருக்கும் ஐசரி கணேஷுற்கு, வருண் மணியன் தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "தமிழ் சினிமா தள்ளாட்டத்தில் இருக்கும் இந்த நிலையில் துறைக்குள் வந்திருக்கும் ஐசரி கணேஷ் அவர்களை நான் பாராட்டுகிறேன். அவர் சக மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது மட்டுமல்ல, தைரியமான, நேர்மையானவரும் கூட.

எங்களைப் போன்ற கார்ப்பரேட்டுகளை ஆக்கியது போல தமிழ் சினிமா அவரையும் நடத்தாது என்று நம்புகிறேன். நாங்கள் பணத்தை மட்டும் இழக்கவில்லை, நேரத்தை, உறவுகளையும் இழந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார் வருண் மணியன். 'வாயை மூடி பேசவும்' மற்றும் 'காவியத்தலைவன்' ஆகிய படங்களை சஷிகாந்த்துடன் இணைந்து தயாரித்தவர் வருண் மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பிரபலமான கட்டுமான நிறுவனத்தின் தலைவர் வருண் மணியன். அவர் தமிழ் திரையுலகில் பணம், நேரம், உறவுகள் அனைத்தையும் இழந்துள்ளேன் என்று ட்வீட் செய்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x