Published : 14 Nov 2019 06:37 PM
Last Updated : 14 Nov 2019 06:37 PM
மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து அமலாபால் விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் தற்போது பலராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன்' மாறியுள்ளது. ஏனென்றால், பலமுறை முயற்சி செய்யப்பட்டுக் கைவிடப்பட்ட நிலையில் இம்முறை இயக்கியே தீருவது என்று மணிரத்னம் தீவிர முனைப்பில் பணிபுரிந்து வருகிறார்.
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆனால், படக்குழு இன்னும் யாருடைய பெயரையும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. இதனிடையே, அமலாபால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அவரும் சில பேட்டிகளில் அதனை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து அமலாபால் விலகிவிட்டதாகப் படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். படப்பிடிப்புக்காக இதர நடிகர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதில் அமலாபால் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் அவர் விலகியிருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அமலாபால் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கிறார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் மணிரத்னம். முதற்கட்டப் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT