Published : 31 Oct 2019 08:11 PM
Last Updated : 31 Oct 2019 08:11 PM

விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர்

விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்துக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வந்தார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு ஜூன் 14-ம் தேதி பழநியில் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஊட்டியில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினார்கள். இதில் நாயகியாக மேகா ஆகாஷ், வில்லனாக மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடித்து வந்தார்கள். விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடித்து வரும் இந்தப் படத்துக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்தக் கதையில் ஒரு சர்வதேச அளவிலான பிரச்சினையைப் பேசியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x