Published : 22 Sep 2019 09:52 AM
Last Updated : 22 Sep 2019 09:52 AM
‘கோமாளி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், ஒரு கார் பரிசளித்துள்ளார்.
இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது:
நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. ‘கோமாளி’ படம் தொடங்கியதில் இருந்தே தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, ஐசரி கணேஷ் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்.
அந்த படத்தில் 90-களின் குழந்தைகள் பற்றிய பகுதியில் நான் ஒரு விஷயத்தை தவறவிட்டிருந்தேன். அதாவது, அப்போதெல்லாம் தேர்வுகளில் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் பரிசு தருவேன் என்று சொல்லி பெற்றோர் ஊக்கம் அளிப்பார்கள். இதை படத்தில் நான் காட்சிப்படுத்த தவறிவிட்டேன்.
ஆனால், தந்தைபோல நான் மதிக்கும் ஐசரி கணேஷ், ‘கோமாளி’ படத்தின் வெற்றிக்காக எனக்கு இப்போது கார் பரிசளித்துள்ளார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா, கே.எஸ்.ரவிகுமார், ஹிப்ஹாப் ஆதி மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT