Published : 19 Sep 2019 05:41 PM
Last Updated : 19 Sep 2019 05:41 PM

மீண்டும் இணையும் சல்மான்கான் - பிரபுதேவா

'தபங் 3' வெளியீட்டுக்கு முன்பாகவே, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

'பாரத்' படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் 'தபங் 3' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் 'தபங் 3' வெளியாகவுள்ளது. இதனிடையே சல்மான்கான் - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.

நவம்பரில் தொடங்கவுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகவுள்ளது. இதன் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்படுகிறது. அடுத்து, பிரபுதேவா இயக்கத்தில் இந்தியில் இன்னொரு படமும் இயக்கப் பேச்சு நடந்து வருகிறது.

அடுத்ததாக 2 படங்களுமே இந்தியில் ஒப்பந்தமாகியுள்ளதால், தமிழில் புதிதாக எந்தவொரு படத்தையும் பிரபுதேவா ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. இப்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப் படங்களின் டப்பிங் பணிகள் மும்பையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x