Published : 18 Sep 2019 05:27 PM
Last Updated : 18 Sep 2019 05:27 PM
சுந்தர்.சி இயக்கியுள்ள 'ஆக்ஷன்' படமும், நாயகனாக நடித்துள்ள 'இருட்டு' படமும் ஒரே வாரத்தில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆக்ஷன்'. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, அக்டோபர் 2-ம் வாரத்தில் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளது.
இதனிடையே, வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'இருட்டு'. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்தது. தற்போது இந்தப் படத்தின் வெளியீடு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் அக்டோபர் 11-ம் தேதி 'இருட்டு’ வெளியாகும் என அறிவித்துள்ளது.
இதனால் ஒரே வாரத்தில் இரண்டு சுந்தர்.சி படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேதியை விட்டால் டிசம்பரில் தான் வெளியிட முடியும் என்பதால், 'ஆக்ஷன்' படமும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT