Published : 11 Sep 2019 06:45 PM
Last Updated : 11 Sep 2019 06:45 PM

'தர்பார்' செகண்ட் லுக் வெளியீடு; ரஜினி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் புகழாரம் 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் இன்று வெளியானது.

லைகா தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன்முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் 'தர்பார்'. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் முதல் போஸ்டர் கடந்த ஏப்ரம் மாதம் வெளியானது.

பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் நடிக்கிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராம்- லட்சுமண் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணிபுரிகின்றனர்.

'தர்பார்' 2020 பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் செகண்ட் லுக்கை லைகா நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனை ரீட்வீட் செய்து இயக்குநர் முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இளைஞர், அழகானவர், அறிவார்ந்தவர், கடுமையானவர்... இதற்கு முன் பார்த்திராத அவதாரத்தில் தலைவர்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x