Published : 02 Sep 2019 09:50 AM
Last Updated : 02 Sep 2019 09:50 AM

இரு நாயகர்கள் படத்தில் விஜய் ஆன்டனியுடன் அல்லு சிரிஷ்

விஜய் ஆன்டனியை வைத்து அடுத்து ஒரு படம் இயக்குகிறார் விஜய் மில்டன். இதில் 2-வது நாயகனாக அல்லு சிரிஷ் நடிக்கிறார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி.

இப்படத்தில் நடிப்பது குறித்து அல்லு சிரிஷ் கூறியதாவது: தமிழில் நடிப்பது எனக்கு புதிதல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பே ராதாமோகனின் ‘கவுரவம்’ படத்தில் நடித்துள்ளேன். எந்த படமாக இருந்தாலும், அந்த கதை மற்றும் அதில் எனது கதாபாத்திரம் பற்றி கேட்டு, மனதுக்கு பிடித்தால் தான் நடிப்பேன். இது ஒரு சிறு நகரில் நடக்கும் கதை. நிறைய திருப்பங்கள் கொண்ட, இரு நாயகர்கள் கதை ஆகும். கதை கூறிய விதமே பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். நவம்பர், டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி கோவா, டையூ, டாமன் உட்பட இந்தியாவின் அழகிய கடற்கரைகளில் ஒரே கட்டமாக படமாக்கப்பட உள்ளது’’ என்றார். படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x