Published : 15 Jul 2015 11:14 AM
Last Updated : 15 Jul 2015 11:14 AM
தற்போது ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்தவுடன், த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சூர்யா.
சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்க விக்ரம் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்க 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'24' படத்தைத் தொடர்ந்து 'சிங்கம் 3', 'சதுரங்க வேட்டை 2', ரஞ்சித் இயக்கவிருக்கும் படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூர்யா.
இப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கின் முன்னணி இயக்குநரான த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா. 'அதடு', 'ஜல்சா', 'ஜூலாயி', 'Attarintiki Daredi', 'S/O சத்தியமூர்த்தி' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் த்ரிவிக்ரம்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரிக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT