Published : 19 Aug 2019 06:17 PM
Last Updated : 19 Aug 2019 06:17 PM

செப்.27-ல் வெளியாகிறது 'கைதி'?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘தேவ்’ படத்தைத் தொடர்ந்து ‘மாநகரம்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் கார்த்தி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே இரவில் நடப்பதாக இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் படத்தின் நாயகி என யாரும் கிடையாது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்தது படக்குழு. சில நாட்களுக்கு முன்பு, இரண்டு காட்சிகளை மட்டும் படமாக்கப்பட்டன. எடிட்டிங் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன

'கைதி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் செப்டம்பர் வெளியீடாக இருக்கலாம் எனத் தகவல் வெளியானது. தற்போது செப்டம்பர் 27-ம் தேதி வெளியிடலாம் என்று விநியோஸ்தர்களிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இன்னும் ஓரிரு நாட்களில் இது முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தை முடித்துவிட்டதால், அடுத்து இயக்கவுள்ள 'தளபதி 64' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இதனை பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x